"சஞ்சய் ராவத் நிரபராதி என்றால் விசாரணைக்கு பயப்பட வேண்டாம்"... ஏக்நாத் ஷிண்டே பேச்சு

0 2232

சஞ்சய் ராவத் எந்த தவறும் செய்யவில்லையெனில் அமலாக்கத்துறை விசாரணையை கண்டு அஞ்ச வேண்டாம் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

அவுரங்கபாத்தில் பேசிய அவர், விசாரணையை எதிர்கொள்வேன் என ஊடங்களிடம் சஞ்சய் ராவத் கூறியதை சுட்டிக்காட்டினார்.

தனக்கு பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாக சஞ்சய் ராவத் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, வேறு கட்சியில் இணையுமாறு அவரை யாரும் அழைக்கவில்லை என பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments